×

விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி அவர்களும், கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான வினோதினி அவர்களின் கணவரான அபிமன்னன் அவர்களும், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

கருப்பசாமி மற்றும் அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர்) அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Viralimala ,G.K. ,stalin ,Chennai ,B.C. G.K. Stalin ,Viralimalai ,B.C. G.K. ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...