×

பண்ணைக் கிணறு சுப்பராயன் கோயில் கும்பாபிஷேகம் 3ம் தேதி நடக்கிறது

உடுமலை, ஆக. 31: உடுமலை அருகே பண்ணைக்கிணறு கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர், உச்சிமாகாளியம்மன், கொண்டம்மாள், கருப்பராயன் கோயில்களின் புனராவர்த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 3-ம் தேதி நடக்கிறது.2-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், ஸ்ரீசுத்த ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை நடக்கிறது.

10 மணிக்கு முளைப்பாளிகை எடுத்தல், மாலை 3 மணிக்கு தீர்த்த கலசம் யாகசாலைக்கு வருதல், 5 மணிக்கு சிறப்பு பூஜைகள், இரவு 7.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9 மணிக்கு கேரளா பல்லசேன பிராஷந்த் குழுவினரின் செண்டை மேளம் நடைபெறும்.3-ம்தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு மகா கும்பாபிசேகம் நடக்கிறது. காலை 10 மணி முதல் அன்னதானம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, 6 மணிக்கு குதிரை ரதத்தில் திருவீதி உலா, இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

The post பண்ணைக் கிணறு சுப்பராயன் கோயில் கும்பாபிஷேகம் 3ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Suparayan Temple ,Kumbaphishekam ,Udumalai, Ka ,Valampuri Vinayegar ,Udumalai ,Uchimakaliamman ,Kondimall ,Karuparayan ,
× RELATED ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்