×

அளவுக்கதிகமாக மது குடித்த முதியவர் பலி

ஓசூர், ஆக.31: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (64). தொழிலாளியான இவர் பாகலூர் ஜி.மங்கலத்தில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 26ம் தேதி இவரது மனைவி பார்வதி (58) சொந்த ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அந்நேரம் வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி, அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. மேலும், உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 27ம் தேதி வீட்டில் மயங்கி கிடந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அளவுக்கதிகமாக மது குடித்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnamurthy ,Bagam village ,Senchi taluka, Villupuram district ,Bagalur G.Mangalam ,
× RELATED கோடைகால சரும வறட்சியை போக்கும் வெள்ளரி!