×

தேமுதிக 19ம் ஆண்டு தொடக்க நாள் மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்: கட்சி தலைமை அறிவிப்பு

சென்னை: தேமுதிக 19ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, செப்., 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவு படி, தேமுதிக 19ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 14ம்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் தொடக்க நாளை, கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டும். தேமுதிக தொடக்க நாளை முன்னிட்டு, தேமுதிக கொடி ஏற்றுதல், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒருங்கிணைந்த மாவட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 4 மணி அளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேமுதிக 19ம் ஆண்டு தொடக்க நாள் மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்: கட்சி தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Debutika ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...