×

மதுரை மாவட்டத்தில் உணவு துறை அதிகாரிகள் 538 கடைகளில் திடீர் சோதனை

 

மதுரை, ஆக. 30: மதுரை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தின்பண்ட கடைகள் என 538 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தின்பண்ட கடைகள், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் பொதுமக்களுக்கு சுகாதார முறையில் தரமான உணவு வகைகள் அரசின் சட்டவிதிகளுக்குட்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை சுமார் 538 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பை பயன்படுத்திய 17 கடைகளுக்கு ரூ.34 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 35 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதே போல் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்ற 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 13 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாவட்டத்தில் உணவு துறை அதிகாரிகள் 538 கடைகளில் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Madurai, Ga. 30 ,Food Department ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை