×

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

கூடுவாஞ்சேரி: மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன்(42). இவர், கேட்டரிங் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (38). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சந்தானகிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வந்துள்ளார். அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 வயதான தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, மகள் தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த, தேன்மொழி கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் செய்தார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மாலினி வழக்கு பதிவு செய்து சந்தானகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து, பின்னர் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Poxo ,Guduvanchery ,Bokso ,Vinayakapuram ,Puducherry panchayat ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...