×

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் சாலை தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகன் சபரிமலை (47). அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர் நேற்று அதிகாலை வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சபரிமலையின் மனைவி உமா மகேஸ்வரி (39) தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, மின்மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து சபரிமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உமா மகேஸ்வரி கதறி அழுதார். திருத்தணி சப் – இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி சம்பவ இடத்திற்கு வந்து சபரிமலையின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Krishnan ,Sabarimalai ,S. Agraharam Road ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...