×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து 23,000 கனஅடியாக உயர்வு

தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால் பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில் அவற்றிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை காரணமாக பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 10,000 கன அடி முதல் 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயினருவி, சினியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருமளவில் கொட்டிவருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் ஊரக வளர்ச்சித்துறை , காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் வருவைத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,772 கன அடியிலிருந்து 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114.46 அடியாகவும் நீர் இருப்பு 84.91டி.எம்.சி.யாகவும் உள்ளது.             …

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து 23,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Pilikundulu Caviriyar ,Canadiyadi ,Caviri ,Darmapuri ,Pilikundulu ,Kaviriyadar ,Kaviri ,Karnataka ,Caviar ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...