×

தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

 

திருவாரூர், ஆக. 29: திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புதமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் இருந்து வரும், விருப்பமுள்ள விவசாயிகள் தட்கல் முறையில் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி இந்த மின் இணைப்புக்கு 5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 7.5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், 10 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சமும், 11 முதல் 15 குதிரை திறன் உள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.4 லட்சமும், ஒருமுறை கட்டணம் செலுத்தும் விண்ணப்பதாரர்களுக்கு காத்திருப்பு பட்டியலில் இருந்து முன்னுரிமை அளித்து மின் இணைப்பு வழங்கப்படும். எனவே, திருவாரூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள விருப்பம் உள்ள விவசாயிகள், இந்த தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு தங்களது பகுதி செயற்பொறியாளர்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur Power Board ,Supervising ,Sureshkumar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே போலீசார் அதிரடி