×

தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி புதுகையில் தர்ணா போராட்டம்

 

புதுக்கோட்டை, ஆக.29: மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும். மாவட்ட, நகரக் கூட்டுறவு வங்கி எனத் தரம்பிரிக்காமல் அனைத்து ஊழியர்களுக்கும் 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

The post தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி புதுகையில் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tharna ,Tamil Nadu Bank ,Pudukkotta ,State Leadership Cooperative Bank ,District Central Cooperative Bank ,Tarna ,Year ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...