×

திருவில்லிபுத்தூர் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

திருவில்லிபுத்தூர், ஆக.29: திருவில்லிபுத்தூர் செயின்ட் ஜோசப் ஆர்சி மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தாளாளர் தந்தை சந்தன சகாயம் தலைமையிலும், உதவிபங்குத்தந்தை செல்வநாயகம் அடிகளார் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிகண்ணன் கலந்துகொண்டு 88 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இறுதியாக தலைமையாசிரியர் பரலோகம் நன்றி கூறினார்.

The post திருவில்லிபுத்தூர் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,St. Joseph RC High School ,Thiruvilliputhur ,Chandana ,
× RELATED வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க...