×

கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; பெண் கஞ்சா வியாபாரிகள் ரவுடி உள்பட 3 பேர் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: புதுப்பேட்டை பகுதியில் டீ குடித்துவிட்டு, பணம் தர மறுத்து, கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மற்றும் 2 பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுப்பேட்டை சந்திர பானு தெருவில் ராஜ்குமார் (42) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு, ஓட்டேரி பொன்னன் தெருவை சேர்ந்த ரவுடி சைக்கோ (எ) பிரசாந்த் (28) மற்றும் அவரது நண்பரான அண்ணாமலை (26) ஆகியோர் ேநற்று முன்தினம் டீ குடித்துவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அப்போது, கடை உரிமையாளர் ராஜ்குமார் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி, ராஜ்குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பிரசாந்த் மற்றும் அண்ணாமலை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
உடனே கஞ்சா குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, கஞ்சா வியாபாரிகளான புதுப்பேட்டை அய்யாசாமி தெருவை சேர்ந்த விக்கி (எ) விக்ரம் (19), கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்கில் ெதாடர்புடைய கஞ்சா பெண் வியாபாரியான பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செமத்தியா (52), அவரது தோழி சத்தியவாணி (எ) பொம்முக்குட்டி (42) ஆகியோருடன் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அதை
தொடர்ந்து போலீசார் செம்மத்தியா, சத்தியவாணி, விக்கி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; பெண் கஞ்சா வியாபாரிகள் ரவுடி உள்பட 3 பேர் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Chennai ,Puduppet ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...