×

செப்.2ம் தேதி தொடங்குகிறது சிங்கப்பூரில் தமிழ் இளைஞர் திருவிழா

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மலாய், தமிழ் உள்பட 4 மொழிகள் அலுவல் மொழியாக உள்ளன. இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக தமிழ் இளைஞர்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2ம் தேதி தேதி விழா தொடங்குகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் தமிழ் மொழி குழு தலைவர் எஸ்.மனோகரன் நேற்று கூறுகையில்,‘‘ இளைஞர்களிடையே தமிழ் மொழியை வளர்ப்பதற்காக இது நடத்தப்படுகிறது.

இந்த திருவிழா மொழி மீதான ஆர்வம் கொண்ட தனி நபர்களின் சந்திப்பு ஆகும். மொழியை கொண்டாடுவது மட்டுமில்லாமல், இளைஞர்களின் தனி திறமையையும் படைப்பாற்றலை உருவாக்கும் மேடையாகவும் இருக்கும்’’ என்றார். கடந்த 2000 ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழ் மொழி குழு உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரின் கலாசாரம் மற்றும் இளைஞர் நல அமைச்சக பரிந்துரையின்படி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

The post செப்.2ம் தேதி தொடங்குகிறது சிங்கப்பூரில் தமிழ் இளைஞர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Tamil Youth Festival ,Singapore ,
× RELATED லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற...