×

பொதட்டூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி

பள்ளிப்பட்டு: மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே காக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(48). இவர், பொதட்டூர்பேட்டை துணை மின்நிலைய மின்வாரிய ஊழியர். இவர், வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்று மாலையில் பேருந்து நிலையம் அருகில் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள மின்மாற்றில் ஏற்பட்ட மின்தடை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டு இறந்த லைன்மேன் உடல் மீட்டு பிரதபரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டு மேலும் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஏழுமலைக்கு மனைவி, மகள் உள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post பொதட்டூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Pothatturpet ,Pallipattu ,Yemumalai ,Kakkalur ,Thiruvallur district ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை