×

பெரம்பலூர் அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா

 

பெரம்பலூர்,ஆக.28: பெரம்பலூர் அறிவுத் திருக்கோவிலில், மனவளக் கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. இதில் 75 தம்பதிகள் பங்கேற்றனர். உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவிய வேதாத்திரி மகரிஷியின் துணைவியார் அன்னை லோகாம்பாளின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30ம் தேதி பெண்மையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பெரம்பலூர் பாலக்கரை அருகே அமைந்துள்ள அறிவுத் திருக்கோவிலில், பெரம்பலூர் மனவளக் கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு விழா மன்றத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மன்றத்தின் பொருளாளர் கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசினார். \”மாண்புமிக்க மனைவி \” என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தர் மற்றும் \”அன்னை லோகாம்பாள்\” என்ற தலைப்பில் பேராசிரியர் பத்மாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

The post பெரம்பலூர் அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா appeared first on Dinakaran.

Tags : Wife Welfare Candidation Festival ,Perambalur Knowledge ,Thirukovil ,Perambalur ,Wife Welfare Candidate ,Mental Arts Forum ,Perambalur Vidya Thirukovil ,Perambalur Knowledge Thirukovil Wife Welfare Candidation ceremony ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அறிவுத்திருக்கோவிலில் உலக அமைதி வேண்டி உலக நல வேள்வி விழா