×

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

 

தா.பழூர். ஆக. 28: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள‌ புரந்தான் காலனி தெருவை தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி ஐஸ்வர்யா (29) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்த சங்கர் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஐஸ்வர்யாவின் இரண்டு கைகளிலும் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் வெட்டி உள்ளார்.. இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐஸ்வர்யாவை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐஸ்வர்யா சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Tha. Pahur ,Sankar ,Purathan Colony Street ,Vikramangalam, Ariyalur District ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் கரையோரம் தைல மரத்தோப்பில் தீ