×

5 பேர் மீது வழக்குப்பதிவு

 

சிவகாசி, ஆக.28: சிறுமி திருமண வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி புதுதெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் விஜய். இவருக்கும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி ஊர்நல அலுவலர் மேரிராசாத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த குழந்தை திருமணம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த வாலிபர் விஜய் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Muneeswaran ,Pudutheru ,Dinakaran ,
× RELATED வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது