×

கள்ளக்காதலில் வாலிபர் கொலை: கூட்டாளி சரண்

சென்னை:மயிலாப்பூர் நொச்சி நகர் புதிய ஹவுசிங் போர்டு 6வது பிளாக்கு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (36). இவருக்கு டுமிங்குப்பம் செல்வராஜபுரம் பகுதியை சேர்ந்த டொமினிக் (38) என்பவரின் மனைவியுடன் கள்ளக்காதல் இருந்தது. கடந்த வியாழக்கிழமை பிரசன்னா, டொமினிக் மனைவியுடன் அவரது வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், டொமினிக் தனது நண்பர்களான சீனிவாசன், முருகேசன் ஆகியோருடன் இணைந்து அன்று இரவே பிரசன்னாவை, அவரது வீட்டிற்கு சென்று, அவரது மகள் கண் முன்பே கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டொமினிக் உட்பட 3 பேரை தேடி வந்த நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த சீனிவாசன் என்பரை தனிப்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், தரமணியை சேர்ந்த எலக்ட்ரீசியன் முருசேகன் (26) நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ‘டொமினிக் போன் செய்து என்னை அழைத்ததால் தான் நான் வந்தேன் என்றும், நான் கொலை செய்யவில்லை’ என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் அளித்த தகவலின்படி லூர்துசாமி (64) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

The post கள்ளக்காதலில் வாலிபர் கொலை: கூட்டாளி சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Chennai ,Prasanna ,New Housing ,Board 6th Block ,Nochi Nagar, Mylapore ,Duminguppam Selvarajapuram ,Charan ,
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...