×

பைக் மீது வேன் மோதி தொழிலாளி பலி

 

காங்கயம், ஆக. 27: வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், பழனிகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சக்திவேல் (40). இவரது உறவினர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கத்தக்கொடிக்காடு பகுதியைச் சேர்ந்த அரசகுமார் (43), இருவரும் தங்களது வேலை காரணமாக பைக்கில் வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். மாந்தபுரம் பகுதியில் சென்றபோது அவருக்கு முன்னாள் சென்ற ஆம்னி வேன் திடீரென திரும்பியதால் பைக்கும், ஆம்னி வேணும் மோதிக்கொண்டது.

இதில், பலத்த காயமடைந்த சக்திவேல் மற்றும் அரசகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சக்திவேல் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். அரசகுமாரை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பைக் மீது வேன் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Ganga ,Labourer ,Sakthivel ,Vellakovil, Mettupalayam, Palanikoundanvalasu ,Erode ,
× RELATED கங்கையில் கரையும் அசுத்தங்கள் என்னவாகின்றன?