×

குற்றாலத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ஆய்வு

தென்காசி, ஆக.27: குற்றாலத்தில் தீ விபத்து நடைபெற்ற குற்றாலநாதர் கோவில் சன்னதி பஜார் பகுதி மற்றும் கடைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீ விபத்திற்கான காரணம் பாதிக்கப்பட்ட கடைகளின் விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கும் ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தனுஷ் குமார் எம்பி, ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, ஒன்றிய பொருளாளர் இசக்கிபாண்டியன், மாவட்ட பிரதிநிதி செல்வம், தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், முத்துக்குமார், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post குற்றாலத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Courtalam ,Tenkasi ,Courtalanath temple ,sannathi ,Dinakaran ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை...