×

விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு..!!

விருதுநகர்: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள், மில் பணியாளர்கள், விவசாய பெருமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 19ம் தேதி நடக்கிறது.முதல்கட்ட தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான தஞ்சநாயக்கன் பட்டி, காந்திநகர், ராஜிவ் நகர், ஆத்திபட்டி, பெத்தம்பாள் நகர் மற்றும் ராமலிங்கா மில் பகுதிகளில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மில் பணியாளர்கள், பெண்கள், விவசாய பெருமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கூறி அமைச்சர் வாக்கு சேகரித்தார். பின்னர் மக்கள் பேசிய அவர், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் எனவும் சம்பளம் ரூ.400 ஆக வழங்கப்படும் எனவும் மோடி அரசை அகற்ற வேண்டும் எனவும் கூறினார். அமைச்சர் உடன் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,Virudhunagar Congress ,Virudhunagar ,Congress ,Manikam Tagore ,Arupukottai ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு