திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியை சேர்ந்த முகம்மது என்பவர் குவைத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். அவர் தன்னுடைய பேக்கில் ஒரு மிக்சி வைத்திருந்தார். எக்ஸ்ரே கருவி மூலம் அதை பரிசோதித்தபோது மிக்சியின் உள்ளே மோட்டாரில் சுற்றப்பட்டிருந்த காப்பர் வயர் தங்கமாக இருக்கலாமோ என்று சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அது காப்பர் கம்பி அல்ல என்றும், தங்கத்தின் நிறத்தை மாற்றி காப்பர் கம்பி போல மோட்டாரில் சுற்றி வைத்திருந்ததும் தெரியவந்தது. மொத்தம் 422 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.21 லட்சமாகும். இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் முகம்மதுவை கைது செய்து நெடும்பாசேரி போலீசில் ஒப்படைத்தனர்.
The post கொச்சி ஏர்போர்ட்டில் மிக்சிக்குள் மறைத்து தங்கம் கடத்திய பயணி கைது appeared first on Dinakaran.