×

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை: ஏடிஜிபி வனிதா பேட்டி

மதுரை: மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார். மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் ரயில்வே ஏடிஜிபி வனிதா நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுப்பு எரிப்பதற்கான விறகு, கரி உள்ளிட்டவை ரயில் பெட்டியில் இருந்தன. மதுரை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தவில்லை. பயணிகளை அனுப்பிவைத்த டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏடிஜிபி தெரிவித்தார்.

The post மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை: ஏடிஜிபி வனிதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai ,ADGB ,ATGB ,Vanita ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை