×

சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்வரும் 4ம் தேதி முதல் 38 இடங்களில் செயல்படும்: ஆன்லைன் முன்பதிவு நாளை மறுதினம் தொடக்கம்

திருவண்ணாமலை, ஆக.26: திருவண்ணாமலை மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில் 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 4ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. எனவே, வரும் 28ம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில், சம்பா, நவரை மற்றும் சொர்ணவாரி பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் கொள்முதல் செய்வதற்காக, நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. அதன்படி, சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் கொள்முதல் செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் 11 தாலுகாக்களில் முதற்கட்டமாக 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 4ம் தேதி முதல் திறக்க கலெக்டர் முருகேஷ் அனுமதித்துள்ளார்.

அதன்படி, வெளுக்கானந்தல், சோமாசிபாடி, அணுக்குமலை, கண்ணக்குருக்கை, மேல்முடியனூர், தண்டராம்பட்டு, அரியப்பாடி, தச்சூர், மண்டகொளத்தூர், எடப்பிறை, குன்னத்தூர், எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி, வல்லம், நல்லூர், தென்னாங்கூர், பொன்னூர், கொவளை, மருதாடு, எரமலூர், பாராசூர், புளியரம்பாக்கம், மேல்சீசமங்கலம், கடுகனூர், தவசிமேடு, வாச்சனூர், ஆக்கூர், அரியூர், நாட்டேரி, பெருங்கட்டூர், வெம்பாக்கம், தூசி, சிறுநாவல்பட்டு, பைரவபுரம், நம்பேடு, நெடுங்குணம், மேல்சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

நேரடி நெல் கொளமுதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நாைள மறுதினம் (28ம் தேதி) முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று, உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்று பெற வேண்டும். நெல் விற்பனை செய்ய விரும்பும் நேரடி கொள்முதல் மையத்திற்கு உரிய சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டுசென்று முன்பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் விணணப்பங்கள், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், நெல் கொள்முதல் செய்வதற்கான நாள் மற்றும் நேரம் ஒதுக்கப்படும்.

The post சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்வரும் 4ம் தேதி முதல் 38 இடங்களில் செயல்படும்: ஆன்லைன் முன்பதிவு நாளை மறுதினம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sornavari ,Thiruvannamalai ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!