×

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி அருகே தீ விபத்து: 30-க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பற்றி சேதம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி கரையில் தற்காலிக கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பற்றி எரிந்தது. குற்றாலம் மெயின் அருவி கரையில் சீசனை முன்னிட்டு 3 மாதத்திற்கு மட்டும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றாலம் கோயில் பகுதியில் உள்ள தற்காலிக கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அங்குள்ள தீ பரவி அருகில் உள்ள உணவக கடையில் சிலிண்டர் வெடித்தது. அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பற்றியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றப்பட்டனர்.

செங்கக்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் இன்னும் தீயை முழுமையாக அணைக்க வில்லை. அப்பகுதியில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி அருகே தீ விபத்து: 30-க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பற்றி சேதம் appeared first on Dinakaran.

Tags : Mein ,Fallout ,South Kasasi District ,South Kasi ,Kutculalam Mein Fallout ,Mein Fallout ,South Kashi District ,Dinakaran ,
× RELATED மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...