×

நிலவில் சந்திரயான்-3 இறக்கம் பெரியகுளத்தில் பொதுமக்கள் கொண்டாட்டம்

பெரியகுளம், ஆக. 25: நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து பெரியகுளத்தில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பெரியகுளம் வடகரை பகுதியில் சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவது மக்கள் பார்க்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் சாலையோரத்தில் திரையிட்டு அதை காண்பித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரை இறங்கியதை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இனிப்பு வழங்கி தேசியக்கொடியுடன் ெகாண்டாடினர். நிலவின் தென் துருவத்தில் கால் பதித்ததை இந்தியா முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், பெரியகுளத்தில் பாமர மக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

The post நிலவில் சந்திரயான்-3 இறக்கம் பெரியகுளத்தில் பொதுமக்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chandrayaan- ,on ,Periyakulam ,-3 ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி