×

பைக் மீது மோதிய பஸ் தீப்பிடித்து 2 பேர் பலி

மரக்காணம்: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த தேவேந்திரன் மகன் கார்த்திக் ராஜா (24). இவர் நண்பர் ஓட்டிய பைக்கில் நேற்று மாலை புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை சென்றுள்ளார். மரக்காணம் அடுத்த மண்டவாய் பகுதியில் வந்த போது சென்னையில் இருந்து புதுவை சென்ற அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன் சக்கரத்தில் பைக் சிக்கி சுமார் 20 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பைக் சாலையில் உரசியதில் பஸ்சின் முன் பகுதியில் தீப்பற்றியது. தீ எரிவதை பார்த்து பயணிகள் அலறினர். தகவலறிந்து மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விபத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்களும் உயிரிழந்தனர். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பைக் மீது மோதிய பஸ் தீப்பிடித்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Karthik Raja ,Devendran ,Natrampalli, Vellore district ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...