×

அவிநாசி அருகே செல்போன் கடை பூட்டு உடைத்து நள்ளிரவில் திருட்டு

அவிநாசி, ஆக.24: அவிநாசி அருகே தெக்கலூரில் நள்ளிரவில் செல்போன் கடை ஷட்டர் பூட்டை உடைத்து ரொக்க பணம், செல்போன் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்களை அவிநாசி போலீசார் தேடி வருகின்றனர். அவிநாசி அருகில் தெக்கலூர் ஓம் ஆதித்யா நகரில் குடியிருப்பவர் குழந்தைராஜ் மகன் கிறிஸ்டோ நித்தின் (28). இவர் தெக்கலூரில் கடந்த 4 வருடங்களாக செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை 9 மணிக்கு கடைக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். செல்போன் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 6 பழைய செல்போன்களையும் மற்றும் சர்வீசுக்காக வாங்கி வைத்திருந்த 6 செல்போன்களையும் ரொக்கப்பணம் ரூபாய் 3 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post அவிநாசி அருகே செல்போன் கடை பூட்டு உடைத்து நள்ளிரவில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Thekalur ,
× RELATED அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து