×

ஸ்ரீகாளஹஸ்தி சப்-ஜெயிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு

*கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சப்-ஜெயிலில் நீதிபதி கரண்குமார் ஆய்வு மேற்கொண்டு கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சப்-ஜெயிலில் நேற்று சித்தூர் மாவட்ட நீதிபதி கரண்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறை அலுவலகம், சிறையில் உள்ள குளியலறைகள், சமையலறை, ஸ்டோர் அறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் சிறை கைதிகளிடம் கலந்துரையாடி கைதிகளுக்கு முறையாக தரமான உணவு வழக்கப்படுகிறதா, சிறையில் கைதிகள் சந்திக்கும் பிரச்னைகள், சிறை கைதிகளின் உறவினர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறை, கைதிகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், சிறை கைதிகளுக்கான உரிமைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், வழக்கறிஞர்கள் ராஜேஸ்வர ராவ், அருண் மற்றும் துணைச் சட்டத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

The post ஸ்ரீகாளஹஸ்தி சப்-ஜெயிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : District Magistrate ,Srikalahasti ,Judge ,Karan Kumar ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்