![]()
பெங்களூரு: காவிரி நதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டியுடன் வந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று காலை மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இண்டுவாள கிராமத்தின் அருகில் மாட்டு வண்டியுடன் வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியதால், 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களை மண்டியா போலீஸ் நிலையம் அழைத்து சென்றபின் சில நிமிடங்களில் விடுதலை செய்தனர்.
The post தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு மாட்டு வண்டியுடன் விவசாயிகள் போராட்டம்: 500 பேர் கைது appeared first on Dinakaran.

