×

தமிழக ஆளுநர் அவர் வேலையை தவிர மற்றவற்றை எல்லாம் செய்கிறார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தமிழக ஆளுநர் அவர் வேலையை தவிர மற்றவற்றை எல்லாம் செய்கிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் பின்னணி என்ன என்பதை விளக்க வேண்டும். ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு அரசு சார்பில் உரிய விளக்கம் கொடுத்தும் ஒப்புதல் தரவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

சைலேந்திரபாபு நியமனத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காதது உள்நோக்கம் கொண்டது. அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்காகவே சைலேந்திரபாபுவுக்கு நியமனம் அளிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பணியாற்ற சமூகத்தில் இருந்து ஒருவரை நியமிக்க அரசு முடிவு செய்தது. சென்னை தினம் என்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் மெட்ராஸ் டே என குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டு மக்களை சீண்டி பார்க்கும் செயல் இது, தமிழ்நாடு என்ற சொல்லை மறுக்கிறார். தமிழக மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள், இதற்கான விளைவுகளை ஆளுநர் சந்திப்பார். காவல் துறையில் சர்ச்சைக்கு அப்பாற்பட்டு சைலேந்திர பாபு செயல்பட்டவர்.

டிஎன்பிஎஸ்சியில் முறைகேடு புகார் எழுந்ததால் நல்ல அதிகாரியை நியமிக்க முடிவெடுத்தோம். சமூக நீதி நோக்கத்தோடு முதலமைச்சர் செயல்பட்டார், அதற்கு மாறாக ஆளுநர் செயல்படுகிறார். தம்முடைய ஆட்சியில் சமூக நீதியை எப்போதும் நிலைநாட்டியவர் கலைஞர். திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். “6 மாதத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் வரும். “மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் போது இந்த ஆளுநர் ஓடிவிடுவார். திமுகவிற்கு என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது சீண்டி பார்த்தால் தாங்க மாட்டீர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

The post தமிழக ஆளுநர் அவர் வேலையை தவிர மற்றவற்றை எல்லாம் செய்கிறார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,DMK Organization ,RS Bharathi ,Chennai ,RS ,Bharati ,TNPSC ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...