×

வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக மருமகள் புகார்: மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் விசாரணை..!!

சேலம்: மருமகள் அளித்த வரதட்சணை புகாரில் மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோலியா. 23 வயதாகும் இவருக்கும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே மனோலியாவை சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரதட்சணை பணம் கேட்டு கொடுமை செய்வதாக கணவர், மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனோலியா புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை தலைவருக்கு சேலம் போலீஸ் கடிதம் அனுப்ப உள்ளது.

The post வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக மருமகள் புகார்: மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Mettur P.M.G. MLA ,Sathasivath ,Salem ,Mettur P.M.C. MLA ,Mettur ,B.M.G. ,MLA ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...