×

விபத்தில் விவசாயி பலி

சாயல்குடி, ஆக.22: கடலாடி அருகே புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி(55). இவர் நேற்று முன்தினம் இரவு சாயல்குடியில் இருந்து ஊருக்கு ஷேர் ஆட்டோவில் பின் பக்கம் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது எஸ்.கீரந்தை சாலையில் சாயல்குடியிலிருந்து டூவீலரில் வேகமாக வந்த கட்டாலங்குளத்தை சேர்ந்த நாகசாமி மகன் காசிமுருகன்(22), சாலையில் முன்பாக ஆட்டோ செல்வது தெரியாமல் மோதியுள்ளார்.

இதில் ஆட்டோவிலிருந்த முத்துமணி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் காயமடைந்த காசிமுருகன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Muthumani ,Pudukudiripu ,Cuddaly ,Chayalgudi ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...