×

வேன் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி

 

சாத்தூர், ஆக.22: வேன் மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார்(21). இவர் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல காலையில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றார்.  மாலை அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சிவகாசியை சேர்ந்த மாரிச்சாமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி வந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் நின்றிருந்த வேனின் பின்பகுதியில் சதீஸ்குமார் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே சதீஸ்குமார் பலியானார். மாரிச்சாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post வேன் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Chatur ,Pudupalayam ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?