×

வாலிபர் தள்ளிவிட்டதால் மூதாட்டி சாவு

புவனகிரி, ஆக. 22: பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் சுமதி(38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு குப்புசாமி தான் கொடுத்த பணத்தைக் கேட்டு சுமதியிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுமதியின் தாயான தனலட்சுமி(60) ஏன் வீட்டில் வந்து இப்படி சத்தம் போடுகிறாய் என கேட்டுள்ளார். அதற்கு குப்புசாமி, தனலட்சுமியை கீழே தள்ளி உள்ளார். இதில் கீழே விழுந்து மயங்கியவரை மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுமதி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது தாயார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபர் தள்ளிவிட்டதால் மூதாட்டி சாவு appeared first on Dinakaran.

Tags : Bhuvangiri ,Sumathi ,C. Puthuppet Tsunami ,Barangippet ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு