×

அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் மணிப்பூரில் அமைதி திரும்ப பேரணி, பொதுக்கூட்டம்

கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி அமைதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் தொடர்ந்து நடக்கும் வன்முறை தாக்குதல்கள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை நிறுத்த வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அனைத்து திருச்சபைகளில் இருந்து அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் ஒன்று சேர்ந்து கோத்தகிரி புனித லூக்கா ஆலயத்தில் ஒன்றிணைந்து அங்கிருந்து அமைதி பேரணி தொடங்கி மார்க்கெட் திடலில் ஒன்று கூடினர்.
கிறிஸ்துவ அமைப்புகளின் குருமார்கள் மற்றும் ஆயர்கள் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

பின்பு கோத்தகிரி பகுதியில் உள்ள திருச்சபை பாதிரியார்கள், சபை உறுப்பினர்கள், பெண்கள் ஒன்றிணைந்து மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டியும், அங்கு நடக்கும் வன்முறை தாக்குதலில் இருந்து பெண்கள், பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதாகைகளை ஏந்தி, ஜெபம், பிரார்த்தனை, மவுன பிரார்த்தனைகள் நடந்தது.

இதில் 1000க்கும் மேற்பட்ட அனைத்து சபை கிறிஸ்தவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கோத்தகிரி அனைத்து திருச்சபை ஐக்கியம் குருமார்கள் பிரபு சந்திர மோகன், சற்குணம் சிகாமணி, அமிரத்தராஜ், டேனியல் மணி, மோசஸ், ரவீந்திரன், சிஎஸ்ஐ சபைகளின் கமிட்டி அங்கத்தினர்கள், ஆர்.சி சபைகளின் அங்கத்தினர்கள், பெந்தேகோஸ்தே சபைகளின் அங்கத்தினர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் மணிப்பூரில் அமைதி திரும்ப பேரணி, பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Christian Churches ,Kotagiri ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...