×

குரூப் 4 பணியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு இன்று முதல் கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது

சென்னை: குரூப் 4 பணியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு இன்று முதல் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், வரி தண்டலர், பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு கடந்த மாதம் 20ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி வரை நடத்தியது. இந்த கலந்தாய்வில் 5364 இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், கள உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் 2ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில் குரூப் 4 பதவியில் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. தொடர்ந்து 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை நடைபெறும் என்று
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

The post குரூப் 4 பணியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு இன்று முதல் கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Broadway, Chennai ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்