×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சுந்தரேஸ்வரர் நிகழ்த்திய திருவிளையாடல்களை குறிக்கும் ஆவணி மூலத் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ‘கருங்குருவிக்கு உபதேசம் செய்யும் லீலை’ நடந்தது. நேற்று காலை 9 மணியளவில் சுவாமியுடன் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் தங்கச்சப்பரத்தில் முத்து செட்டியார் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அங்கு சுந்தரேஸ்வரர் நாரைக்கு முக்தி கொடுத்த லீலையை குறிக்கும் விதமாக சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatshi Amman Temple ,Mukheri Mukheri Mukheri Mukheri Nara ,Madurai ,Meenadashi Amman ,Temple ,Tiruviladals ,Suntareshwarar ,Madurai Meenati ,Amman Temple ,Mukha Leel ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை