×

மாயமான 68 ஸ்மார்ட் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு, ஆக. 20: ஈரோடு மாவட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் தொலைத்து விட்டதாகவும், திருடு போய் விட்டதாகவும் கூறி ஏராளமான பொதுமக்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட எஸ்பி ஜவகர், ஈரோடு சைபர் செல் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் புகார்தாரர்களிடம் செல்போன் தொலைந்த இடம், தேதி மற்றும் இதர விவரங்கள் பெற்று, அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்பேரில், போலீசார் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாயமான ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 496 மதிப்பிலான 68 ஸ்மார்ட் போன்களை கண்டுபிடித்தனர். அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில், எஸ்பி ஜவகர் பங்கேற்று, மீட்கப்பட்ட 68 ஸ்மார்ட் போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

The post மாயமான 68 ஸ்மார்ட் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது