×

மரபணு சோதனை மூலம் அமெரிக்காவில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி இந்திய வம்சாவளிக்கு 27 ஆண்டு சிறை

ஹூஸ்டன்: அமெரிக்காவில் மரபணு சோதனை மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் மினால் படேல். இந்திய வம்சவாளியை சேர்ந்தவரான இவர் ஆய்வகம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஜூலை முதல் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் இவர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மரபணு சோதனைகளை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆயிரக்கணக்கானவை மருத்துவ ரீதியாக தேவையற்ற மரபணு சோதனைகளாகும். இதற்காக இவர் டெலிமெடிசன் நிறுவனங்கள், நோயாளிகளின் தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்.

இவரது போலி சோதனைக்கு அமெரிக்க அரசு சார்பில் தேசிய சுகாதார காப்பீடு திட்ட நிறுவனம் மட்டும் ரூ.1500 கோடி செலுத்தி உள்ளது. பெரும்பாலும் இவர் நோயாளிகளிடம் தேவையில்லாமல் புற்றுநோய் மரபணு சோதனை நடத்தி உள்ளார். இதன் மூலம் அவர் நோயாளிகள் தரப்பில் இருந்து அதிக கட்டணம் பெற்றுள்ளார். இதை மறைக்க தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அமெரிக்க மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து தனிப்பட்ட முறையில் அவர் ரூ.200 கோடியும் பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் மினால் படேலுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி சொத்து பறிமுதல் விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

The post மரபணு சோதனை மூலம் அமெரிக்காவில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி இந்திய வம்சாவளிக்கு 27 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : USA ,Houston ,America ,
× RELATED 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி