×

கீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு

 

ஈரோடு,ஆக.19: கீழ்பவானி வாய்க்காலில் இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதுகுறித்து. கீழ்பவானி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இன்று (19ம் தேதி) காலை 11 மணியளவில் வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, படிப்படியாக வாய்க்காலின் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் திறப்பு உயர்த்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post கீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kilpawani canal ,Erode ,Kilibawani Canal ,Thirumurthy ,Executive ,Kilbhavani Watershed Division ,Kilbhavani ,Dinakaran ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்