×

மாற்றுத்திறனாளிகளுக்கு மாரத்தான் போட்டி

 

கோவை, ஆக. 19: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மாரத்தான் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் நாளை நடக்கிறது. சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்தும் போட்டி துவக்க விழாவில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், எஸ்பி பத்ரிநாராயணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியானது 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என மூன்று பிரிவுகளில் நடக்கிறது. தவிர, 3 கிலோ மீட்டர் சிறப்பு ஓட்டம் நடக்கிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் தமிழக பாரா சாம்பியன்களும் பங்கேற்கின்றனர். இதனை தொடர்ந்து சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியும் நடக்கிறது. மேலும், தேசிய பாராலிம்பிக் தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக பாரா வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது என சிற்றுளி அறக்கட்டளை குணசேகரன் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : Marathon ,Coimbatore ,Goundampalayam ,Chituli ,Dinakaran ,
× RELATED கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது...