×

கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது

 

தொண்டாமுத்தூர், ஆக.19: தொண்டாமுத்தூர் அருகே உள்ள புள்ளாகவுண்டன் புதூர் சுடுகாட்டில் கஞ்சா விற்படை நடப்பதாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதி சேர்ந்த குரு பிரசாத் (25), தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்துவரும் வாலாந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (26) இருவரையும் கைது செய்து இருவரிடமும் இருந்த 15 பாக்கெட் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Pulagaundan Pudur crematorium ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவி அசத்தல்