×

திருமங்கலம் அருகே தொழிலில் நஷ்டம் வாலிபர் தற்கொலை

திருமங்கலம், ஆக. 19: திருமங்கலம் அருகே செங்கப்படையை சேர்ந்தவர் விக்னேஷ் (27). பொம்மை வியாபாரி. மனைவி அமராவதி (24). ஒரு மகள் உள்ளார். கடந்த ஓராண்டிற்கு முன்பு தொழிலை விருத்தி செய்ய மினிவேன் வாங்கினார். ஆனால் திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்படவே, தனது மினிவேனை உறவினர் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். இந்நிலையில் அந்த வேன் காரைக்குடியில் வழக்கு ஒன்றில் சிக்கி கொண்டது.

தொழிலில் நஷ்டம், வாகனமும் போலீசில் மாட்டியதால் மனவிரக்தியடைந்த விக்னேஷ் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருமங்கலம் அருகே தொழிலில் நஷ்டம் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Vignesh ,Red Army ,Amaravathi ,Tirumangalam ,
× RELATED திருமணம் செய்துகொள் என மாணவியை மிரட்டிய வாலிபர் கைது