×

ஓடும் பஸ்ஸில் பணம் ‘அபேஸ்’

 

விருதுநகர், ஆக.19: ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் பணம் திருடப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே நடுவப்பட்டியை சேர்ந்தவர் சீனியம்மாள்(58). இவர் காரியாபட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு மகளிடம் ரூ.10ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு தனது இரு ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை பர்ஸில் வைத்துக் கொண்டு காரியாபட்டியில் இருந்து விருதுநகருக்கு டவுன் பஸ்சில் ஏறி வந்துள்ளார். விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இறங்கி வெளியே வந்த போது கட்டை பையில் இருந்த பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சீனியம்மாள் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஓடும் பஸ்ஸில் பணம் ‘அபேஸ்’ appeared first on Dinakaran.

Tags : Abes ,Virudhunagar ,Sriniyammal ,Madhupatti ,Kariyapatti ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...