×

நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் வாலிபர் பலி; 5 பேர் படுகாயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வேளாவள்ளி கருப்பாயிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பரசுராமன் (27). இவர் காரிமங்கலம் அருகேயுள்ள மொரசுப்பட்டியில் உள்ள தங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு சரக்கு ஆட்டோவில் பூஜை பொருட்கள் மற்றும் நாட்டு வெடிகள், பட்டாசு ஆகியவற்றை எடுத்து சென்றார். இரவு 10.30 மணியளவில் பேளராஅள்ளி பகுதியில் வந்த போது, அங்குள்ள விநாயகர் கோயில் முன்பாக வாகனத்தை நிறுத்தி சாமி கும்பிட்டனர்.

அப்போது, சரக்கு ஆட்டோ முன்பாக சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். பட்டாசில் இருந்து தீப்பொறி ஒன்று சரக்கு ஆட்டோவினுள் விழுந்துள்ளது. இதனால் சரக்கு ஆட்டோவில் மூட்டையில் வைத்திருந்த நாட்டு வெடி மற்றும் பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் கருப்பாயி கொட்டாய் பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் விஜயகுமார்(21) உயிரிழந்தார். பரசுராமன், கார்த்தி மகள் பிரதக்‌ஷனா(6), அழகேசன் மகன் தர்ஷன், திருப்பதி மகள் யாசிகா(6), முனுசாமி மகன் நாகராஜ் ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

The post நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் வாலிபர் பலி; 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Subramani Makan Parasuraman ,Velavalli Karuppaiikottai ,Palakodu ,Dharmapuri district ,Karimangalam ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு