புதுடெல்லி: சீனாவை தலைமையிடமாக கொண்டு மும்பையில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் வரி ஏய்ப்புகளை சரிக்கட்ட பிவந்தியில் ஜிஎஸ்டி கண்காணிப்பாளராக பணியாற்றும் ஹேமந்த் குமார் ரூ.30 லட்சம் கேட்டுள்ளார். இது பற்றி சிபிஐ.யில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ அறிவுறுத்தலின்படி, மும்பையில் உள்ள வடாலா ரயில் நிலையத்தில், ரூ.15 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.5 லட்சம் பெற்ற போது சிபிஐ. அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்ட ஜிஎஸ்டி அதிகாரி கைது: சிபிஐ நடவடிக்கை appeared first on Dinakaran.