- காங்கிரஸ்
- தேசிய தலைவர்
- மல்லிகார்ஜூன் கர்கே
- கெ எஸ் ஆனகிரி
- பெங்களூரு
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- கெ அடிலகிரி ச.
- தேசிய ஜனாதிபதி
- கெ அழகி
பெங்களூரு: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று மாலை சந்திக்கிறார். பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் தொடர அனுமதிக்கும்படி கே.எஸ்.அழகிரி வலியுறுத்த உள்ளார். இதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கார்கேவை சந்தித்து பேச உள்ளனர்.
2018 அக்டோபர் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். இவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாநில தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் மாதமே டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. தேர்தல் நெருங்குவதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங். தலைவர் மாற்றம்? செய்யப்பட உள்ளார். செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு என காங்கிரஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
The post காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று மாலை சந்திக்கிறார் கே.எஸ். அழகிரி..!! appeared first on Dinakaran.