டெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய அவதூறு பதிவுக்காக எஸ்.வி.சேகர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால் காணொளி மூலம் ஆஜராக அனுமதிக்கலாம். ஆன்லைன் மூலம் ஆஜராகும் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியுள்ளனர். அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளனர்.
The post பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி appeared first on Dinakaran.