×

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்

திருச்சி: முன்னாள் முதல்வர், பிஜேபி தலைவர் பசவராஜ் பொம்மை அவர்கள் காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது, மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது மட்டும் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பது, காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இவ்வாறு சொல்லியிருப்பது உச்ச நீதிமன்றம் உத்தரவு பெரிதா அல்லது பசவராஜ் பொம்மை சொல்லியிருக்கும் வார்த்தை பெரிதா என்பதை கண்டித்து இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி நடுப்பகுதியில் மணலில் கழுத்துவரை புதைந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

The post விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Mukkombu ,Cauvery River ,Farmers Union ,President ,Ayyakannu ,Former ,chief minister ,BJP ,Basavaraj Pomai ,Karnataka government ,Tamil Nadu ,Cauvery ,Dinakaran ,
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...